ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகள்! #இலங்கை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகள்! #இலங்கை


கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் ராகம பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு ஆறு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளன.


குறித்த ஆறு குழந்தைகளும் ஆண் குழந்தைகள் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா உறுதிப்படுத்தியுள்ளளார்.


இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறை ஆகும். வைத்தியசாலை மற்றும் பெற்றோருக்கு முக்கிய தருணமாகும்.


கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி முதன்முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகள் பிறந்தன. அதில் மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த அரிய மற்றும் விலைமதிப்பற்ற பிறப்புகள் வாழ்க்கையின் அற்புதங்களுக்கும், சுகாதார நிபுணர்களின் அர்ப்பணிப்புக்கும் சான்றாக  விளங்குகின்றன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.