SL vs ENG ஆட்ட ஆரம்பத்தில் இரு விக்கட்டுக்களை இழந்த இலங்கை அணி - இலக்கு 157

advertise here on top
Join YazhNews WhatsApp Community

SL vs ENG ஆட்ட ஆரம்பத்தில் இரு விக்கட்டுக்களை இழந்த இலங்கை அணி - இலக்கு 157

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப சுற்றின் 25வது போட்டி தற்போது இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து 32 ஓவர்களில் 156 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 30 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும், ஏஞ்சலோ மத்தியூஸ் மற்றும் கசுன் ராஜித 2 விக்கெட்டுக்களையும், மஹிஷ் தீக்ஷன ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அதன்படி இலங்கை அணியின் வெற்றிக்கு 157 என நிர்ணயிக்கப்பட்டது. 

தற்போது இலங்கை அணி 2 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 43 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.