கொழும்பு கட்டிடம் ஒன்றில் பரவிய பாரிய தீ; பெண் உட்பட 15 பேர் காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு கட்டிடம் ஒன்றில் பரவிய பாரிய தீ; பெண் உட்பட 15 பேர் காயம்!


கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் இன்று (27) ஏற்பட்ட தீ பரவல் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் அறுவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இன்றைய தினம் காலை 09.30 மணியளவில் இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள ஆடை விற்பனை  நிலையம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.


கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளதுடன், பல வர்த்தக நிலையங்கள் தீயில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, இது குறித்து புறக்கோட்டை பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.