முச்சக்கர வண்டி மோதியதில் 1 வயது குழந்தை பரிதாப பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முச்சக்கர வண்டி மோதியதில் 1 வயது குழந்தை பரிதாப பலி!


நேற்று (04) களுபோவில பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று மோதிய விபத்தில் ஒரு வயதுடைய குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


களுபோவில, கொஹுவளையில் இருந்து தெஹிவளை நோக்கி பயணித்த கார் ஒன்று 3 பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மோதியதைத் தொடர்ந்து முச்சக்கரவண்டி முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடொன்றின் வாயில் மீது மோதியது.


விபத்தில் படுகாயமடைந்த ஒரு தாயும் அவரது ஒரு வயது குழந்தையும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


காயமடைந்த குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதுடன், தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொரு பெண்ணும் சிறு காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 


உயிரிழந்த குழந்தை நுகேகொட பிரதேசத்தில் வசிக்கும் ஒரு வயதுடைய ஆண் குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.


விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.