சுற்றுலாத்துறை அபிவிருத்தியடைய நாட்டு மக்களின் மன நிலை மாறவேண்டும்! -டயனா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுற்றுலாத்துறை அபிவிருத்தியடைய நாட்டு மக்களின் மன நிலை மாறவேண்டும்! -டயனா


உள்நாட்டு உணவு கலாசாரம் இன்னும் சுற்றுலாத்துறைக்கு அறிமுகப்படுத்தாமல் இருக்கிறது. இதனை அறிமுகப்படுத்தாதவரை சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முடியாது. அத்துடன், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய எமது மனநிலை மாறவேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.


சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு நேற்று (26) சுற்றுலா இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


சுற்றுலாத்துறை நாட்டுக்கு அதிகம் வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய துறையாகும்..என்றாலும் கடந்த 5 வருடங்களில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல், கொவிட் தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமைகள் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்திருந்தது.


இருந்தபோதிலும் தற்போது நாடு படிப்படியாக ஸ்திரநிலைக்கு வருவதன் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகையும் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் சுற்றுலா பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருக்கிறது.


அத்துடன் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வரும்போது அவர்கள் பல்வகையான உணவு வகைகளை உற்கொள்ள ஆசைப்படுவார்கள். எமது நாடுக்கு என உணவு கலாசாரம் ஒன்று இருக்கிறது.


ஆனால் எமது உணவு கலாசாரம் இதுவரை சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப்படாமல் இருக்கிறது. எமது உணவு கலாசாரம் சுற்றுலாத்துறைக்கு அறிமுகப்படுத்தாதவரை எமது சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்ய முடியாது. 


அதேபோன்று, எமது நாட்டில் இருக்கும் ஹோட்டல் நிர்வாக கல்வியானது பட்டப்படிப்பு வரை கொண்டுசெல்ல வேண்டும். ஹோட்டல் தொழிற்சாலை தொடர்பான பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகின்றன.


ஹோட்டல் பாடசாலைகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். அதேபோன்று சுற்றுலா பிரதேசங்களில் இரவு வியாபார நிலையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் எமது நாட்டில் இரவு 10.00 மணியுடன் வியாபார நிலையங்கள் மூடப்படும் நிலையே இருந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். 


அத்துடன், நாட்டில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்ய நாட்டு மக்களின் மன நிலை மாறவேண்டும். பாராளுமன்றத்தில் இது தொடர்பாக பல தடவைகள் தெரிவித்திருக்கிறேன்.


ஆனால் எமது பாராளுமன்றத்தில் தற்போது இருப்பவர்களில் ஒரு சிலர் பாராளுமன்றத்தில் இருப்பதை விட வீடுகளில் இருப்பது நல்லது. அதனால் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்ய தேவையான வழிகாட்டல்கள் மற்றும்  சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றமே மேற்கொள்ள வேண்டும் என்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.