பாடசாலையில் கசிப்பு விற்பனை செய்த மாணவன்! #இலங்கை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலையில் கசிப்பு விற்பனை செய்த மாணவன்! #இலங்கை


இரத்தினபுரி மாவட்டத்தில் கலவானா பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவனொருவன் சக மாணவர்களுக்கு கசிப்பு விற்பனை செய்துள்ளார்.


இந்நிலையில், இதனை அவதானித்த பாடசாலை ஆசிரியர் மாணவனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.


குறித்த பாடசாலையில் 9 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு கசிப்பு விற்பனை செய்துள்ளார்.


குறித்த மாணவன் தண்ணீர் போத்தலில் கசிப்பை கொண்டு சென்று உயர்தர மாணவர்களக்கு கோப்பைகளில் ஊற்றி விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்நிலையில், பொலிஸார் மாணவனை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளார்கள்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.