கம்பளையில் பஸ் சாரதியை கடத்திய பெண் உட்பட்ட கும்பல் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கம்பளையில் பஸ் சாரதியை கடத்திய பெண் உட்பட்ட கும்பல் கைது!


கம்பளை ஜயமாலாபுர பிரதேசத்தில் பேருந்தில் பயணித்த நபரை வாளால் தாக்கி கடத்திச் சென்ற ஒரு பெண் உட்பட ஐவரை கொழும்பு பகுதியில் வைத்து பழங்கால வாள் மற்றும் வேனுடன் கைது செய்யப்பட்டதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.


கடந்த 24ஆம் திகதி கொத்மலை மாவெலயில் இருந்து கண்டி செல்லும் பேருந்தில் ஏறிய ஹேமந்த ராஜபக்ஷவை கத்தியால் தாக்கி கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் கம்பளை பொலிஸாரால் கொழும்பு பகுதிக்கு சென்று பல்வேறு இடங்களில் சந்தேகநபர்களை கைது செய்ததுடன் அதற்காக பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் வாள் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளனர்.


குறிப்பிட்ட வாளுக்கு புராதன மதிப்பு உள்ளதா என தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.