மலேசியாவில் 3 இலங்கையர்கள் படுகொலை; சரணடைந்த சந்தேகநபர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மலேசியாவில் 3 இலங்கையர்கள் படுகொலை; சரணடைந்த சந்தேகநபர்கள்!


மலேசியாவில் மர்மமான முறையில் மூன்று இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் மலேசிய காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.


சரணடைந்த இருவரும் இலங்கையர்கள் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.


செந்தூல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதிக்கு சொந்தமான கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து உயிரிழந்த மூன்று இலங்கையர்களின் சடலங்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.


உயிரிழந்த மூவரில் ஒருவர் வீட்டினைச் சேர்ந்த தம்பதியினரின் மகன் எனவும், மற்றைய இருவர் வீட்டை வாடகைக்கு குடியிருந்த இருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகும்.


இந்நிலையில் சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் 2 பேர் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.