நான்கு வயது மகளை தாக்கிய தாய் மற்றும் சட்டபூர்வமற்ற கணவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நான்கு வயது மகளை தாக்கிய தாய் மற்றும் சட்டபூர்வமற்ற கணவர் கைது!


தனது நான்கு வயது மகளை தாக்கிப் பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தாய் என கூறப்படுபவரும் தாயின் சட்டபூர்வமற்ற கணவன் என சந்தேகிக்கப்படும் நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக தொரட்டியாவை  பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபர்களான இவர்கள் குருநாகல் அலகொல்தெனிய மொடர்வத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.


சிறுமியின் முகம், முதுகு மற்றும் கைகால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் தாக்கத்தால் அவரது கண் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.   


பல நாட்களாக வீட்டில் வைத்து சிறுமி தாக்கப்பட்டு வந்த நிலையில், அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததன் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் சிறுமி குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.