ஜனாதிபதி ரணிலை கொலை செய்ய வீரர் தேவை என பதிவிட்டவருக்கு நேர்ந்த நிலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி ரணிலை கொலை செய்ய வீரர் தேவை என பதிவிட்டவருக்கு நேர்ந்த நிலை!


ஸ்ரீ சித்தார்த்தா தேசிய பாடசாலையின் 150ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளவிருந்த ஜனாதிபதியை கொலை செய்ய சினைப்பர் தாக்குதல் நடத்துவதற்கு வீரர் தேவை என முகநூலில் பதிவு வெளியிட்ட 19 வயதான இளைஞரை புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.


எப்பாவல மடியாவ பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.  


இச்சந்தேக நபர், கணினி மற்றும் கைத்தொலைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையாகி விளையாடி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


இது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.