யாழில் குண்டுத் தாக்குதல்; ஐவர் காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழில் குண்டுத் தாக்குதல்; ஐவர் காயம்!


தாவடி - வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது அதிகாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோடு வீட்டு உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளது.


குறித்த தாக்குதலில் வீட்டில் இருந்த யுவதி உள்ளிட்ட ஐந்து பேர் காயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெட்ரோல் குண்டு தாக்கு நடத்தப்பட்ட வீட்டில் உள்ள யுவதியை காதலித்ததாகவும், பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறிய போது பெற்றோர் மறுத்திருந்த நிலையில், குறித்த இளைஞன் தனது குழுவினருடன் வந்து இன்று அதிகாலை வீட்டினை தாக்கி சேதப்படுத்தி வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.


தாக்குதல் மேற்கொண்ட இளைஞனை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவரையும், அவருடன் தாக்குதலுக்கு வந்த ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.