ஹரக் கட்டாவை தப்பிச் செல்ல முயற்பட்டமைக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹரக் கட்டாவை தப்பிச் செல்ல முயற்பட்டமைக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!


காவல்துறை தடுப்பில் இருந்து 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன தப்பிச் செல்ல முயற்பட்டமைக்கு உதவியதாகக் கூறப்படும் காவல்துறை கான்ஸ்டபிளை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.


குறித்த காவல்துறை கான்ஸ்டபிளின் படத்தை காவல்துறை ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது.


'ஹரக் கட்டா' என்று அழைக்கப்படும் திட்டமிடப்பட்ட குற்றக் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் தலைவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை, குற்றப் புலனாய்வுத் துறையின் தடுப்பில், இருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.


இந்த முயற்சிக்கே தற்போது தேடப்படும் காவல்துறை கான்ஸ்டபிள் உதவியுள்ளார் என்று குற்றப்புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


இந்தநிலையில் குறித்த கான்ஸ்டபிளின் உதவியுடன், அதிகாரிகளின் தேநீரில் விசம் கலந்ததாக ஹரக் கட்டா விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.


அத்துடன் கழிவறைக்கு சென்று திரும்பும்போது அவரின் கைவிலங்கு கழற்றப்பட்டதாகவும் இதன்போதே விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கியை தாம் பறிக்க முயற்சித்ததாகவும் ஹரக் கட்டா, விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார்.


எனினும் ஏனைய காவல்துறையினர் இந்த முயற்சியை தடுத்தனர்.


இந்நிலையில் குறித்த சம்பவத்தை அடுத்து ஹரக் கட்டாவுக்கு உதவியதாக கூறப்படும் காவல்துறை கான்ஸ்டபிள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.