ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த 20 வயது இளைஞனின் மரணத்திற்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் பொறுப்பு கூற வேண்டும்! -பந்துல

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த 20 வயது இளைஞனின் மரணத்திற்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் பொறுப்பு கூற வேண்டும்! -பந்துல


ராகமை, ஹொரபே பகுதியில் புகையிரதத்தின் மீதேறி பயணித்த போது கீழே விழுந்து உயிரிழந்த இளைஞனின் மரணத்துக்கு இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட புகையிரத சாரதிகள் 84 பேரும் பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


ஹொரபே பகுதியில் ரயிலின் மேல் ஏறி பயணித்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.


இன்று (12) காலை கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் கூரையின் மேல் ஏறி பயணித்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரே ஹொரபே பகுதியில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக பல ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டமையினால் குறித்த இளைஞர் புகையிரதத்தின் கூரையின் மேல் ஏறி பயணித்துள்ளார். இதன்போது தவறி விழுந்த அவர் ரயிலின் கீழ் பகுதியில் சிக்குண்டு 50 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு, பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 20 வயதுடைய குறித்த இளைஞரே சம்பவத்தின் போது உயிரிழந்தார்.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.