சினோபெக் நிறுவன எரிபொருள் மீண்டும் விலை குறைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சினோபெக் நிறுவன எரிபொருள் மீண்டும் விலை குறைப்பு!


இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்கள் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்த நிலையில், சினோபெக் நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை 3 ரூபாவினால் குறைத்துள்ளது. 


ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 358 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 414 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 338 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 356 ரூபாவாகவும், ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலையானது 231 ரூபாவாக மூன்று நிறுவனங்களும் நிர்ணயித்துள்ளன.


சீனாவிற்கு சொந்தமான சினோபெக் நிறுவனம் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை மத்தேகொட பகுதியில் ஆரம்பித்துள்ளது.


நாடு தழுவிய ரீதியில் சுமார் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்க சினோபெக் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.