6 பில்லியன் வருமானம்; கஞ்சா விரைவில் சட்டப்பூர்வமாகும்! -டயானா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

6 பில்லியன் வருமானம்; கஞ்சா விரைவில் சட்டப்பூர்வமாகும்! -டயானா


கஞ்சா எமது கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்தது ஒன்று என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டார்.

இலங்கையில் மருத்துவ தேவைக்காக கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்க தானே முன்னின்று செயற்பட்டதாக கூறிய அவர் அதற்காக தான் பெருமை அடைவதாகவும் கூறினார்.

இன்று பலரும் தாங்கள் தான் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை செய்ததாக கூற முற்படுவதாகவும் அவர் கூறினார்.

எனது  குழந்தைக்கு பல தந்தைகள் உள்ளனர் ஆனால் குழந்தையின் தாய் நான் மாத்திரமே என அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் வாரம் மருத்துவத்த தேவைக்காக ஏற்றுமதி செய்வதற்கு கஞ்சா பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என கூறிய அவர் அது இலங்கை வரலாற்றில் முக்கியமான நாள் என அவர் கூறினார்.

மேலும், இந்த வேலைத்திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தினால், வருடத்திற்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.