வேலைவாய்ப்பு பணமோசடி; வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வேலைவாய்ப்பு பணமோசடி; வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள வேண்டுகோள்!


முறையான அனுமதி பத்திரம் இன்றி ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 83 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 16 ஆம் திகதி குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இராஜகிரிய, கலபலுவாவ புட்கமுவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவாகக்கூறி 813,000 ரூபாவை பெற்று, வாக்குறுதியளித்தபடி வேலை பெற்றுத் தரவில்லை என கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த முறைப்பாட்டிற்கு மேலதிகமாக சந்தேக நபருக்கு எதிராக பணியகத்திற்கு 09 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 


மேலும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய அவர் பல்வேறு நபர்களிடமிருந்து 8,390,000 ரூபாவை பெற்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தலா 5 இலட்சம் ரூபா 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிமித்தம் செல்வதற்காக பணம் மற்றும் கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர் தனிநபர் அல்லது நிறுவனம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த தகவல்களை உத்தியோகபூர்வ இணையதளமான www.slbfe.lk பார்வையிட முடியும்.


மேலும் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான சட்டரீதியான உரிமம் முகவர்களிடத்தில் உள்ளதா மற்றும் அதற்கான அனுமதி நிறுவனம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.


இது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவும், மோசடிகளை தெரியப்படுத்தவும் 1989 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யலாம்.


எம்.வை.எம்.சியாம்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.