சிறைச்சாலையில் இரு கைதிகள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறைச்சாலையில் இரு கைதிகள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!


காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவந்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் உயிரிழப்புகளுக்கு பற்றீரியா தொற்றுதான் காரணம் என தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், நோய் அறிகுறிகளுடன் 07 கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டள்ளார்.


அந்த நபர்களுக்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.


இறந்தவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களும் விளக்கமறியல் சிறையில் உள்ள கைதிகளாவர்.


இச்சம்பவம் தொடர்பாகன அறிக்கையைப் பெறவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் காலி சிறைச்சாலையில் தற்போது 1,023 கைதிகள் உள்ளனர் எனவும் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.