கடன் பெற்று நீண்ட காலமாக கடன் திருப்பி செலுத்தாததால் கடத்தப்பட்ட வர்த்தகர் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடன் பெற்று நீண்ட காலமாக கடன் திருப்பி செலுத்தாததால் கடத்தப்பட்ட வர்த்தகர் மீட்பு!


வெயாங்கொடை பகுதியில் மீட்கப்பட்ட வர்த்தகர் ஒருவர் பலாங்கொடை பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.


நபர் ஒருவரிடம் 50 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு நீண்டகாலமாக மீள செலுத்தாமையினால் பணம் கொடுத்தவரினால் வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளார்.


இந்நிலையில் கடத்தியவரால் வர்த்தகரின் சகோதரிக்கு தொலைபேசி அழைப்பொன்று ஏற்படுத்தப்பட்டு, பணத்தை செலுத்தாவிட்டால் கொலை செய்யப்போவதாகவும் அச்சுறுத்தப்பட்டுள்ளது.


கடந்த 2018 ஆம் ஆண்டு 50 இலட்சம் ரூபாய் பணத்தை குறித்த வர்த்தகர் கடனாக பெற்றுக்கொண்டுள்ளார்.


இந்நிலையில் நீண்டகாலமாக அவர் மீள செலுத்தாது ஏமாற்றிய நிலையேயே கடத்தப்பட்டுள்ளார்.


கடத்தலுடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.