வேன் நிறுத்தப்பட்ட லொறி மீது மோதியதில் மூவர் பலி பலர் காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வேன் நிறுத்தப்பட்ட லொறி மீது மோதியதில் மூவர் பலி பலர் காயம்!


ஏ9 - வீதியில் இடம்பெற்ற விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்து விபத்து மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சன்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது.


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வேன் ஒன்று வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பகுதியில் மோதிய நிலையில் குறித்த லொறி முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


விபத்தில் காயமரடைந்தவர்கள் கிளிநொச்சி மற்றும் மாங்குளம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்தில் முல்லேரியா புதிய நகரம், வெல்லம்பிட்டிய மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்கள் உயிரிழந்துள்ளனர்.


விபத்து தொடர்பில் வேனின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.