வேலை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தவரிடம் பணத்தை பறித்த பொலிஸார் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வேலை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தவரிடம் பணத்தை பறித்த பொலிஸார் கைது!


மட்டக்களப்பு ஏறாவூரில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு இரவு திரும்பிக் கொண்டிருந்தவரிடம் 6,500 ரூபா பணத்தை பறித்தெடுத்த சம்பவம் தொடர்பாக 3 பொலிஸார் இன்று (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


சம்பவதினமான புதன்கிழமை இரவு மட்டக்களப்பிலுள்ள உணவகத்தில் தனது கடமையை முடித்து கொண்டு இரவு 11 மணியளவில் ஏறாவூர் மிச் நகரிலுள்ள வீட்டிற்கு மோட்டர் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது, அந்த பகுதியில் இரவு ஜீப் வண்டியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று பொலிஸார் குறித்த நபரை நிறுத்தி சோதனையிட்டனர்.


இதனையடுத்து, குறித்த நபருக்கு அடையாள அட்டை இல்லாததையடுத்து அவரை தமது ஜீப் வண்டியில் ஏற்றி அந்த பகுதி வீதிகளில் சுற்றிதிரிந்து 25 ஆயிரம் ரூபா பணம் தந்தால் விடுவதாகவும் அல்லது கைது செய்து சிறையில் அடைப்பதாகவும் அச்சுறுத்தியுள்ளார்கள்.


இந்நிலையில், குறித்த நபரிடமிருந்த 6,500 ரூபாவை பறித்தெடுத்து விட்டு ஜீப் வண்டியில் இருந்து இறக்கி விட்டுள்ளனர்.


இச்சம்பவம் பொலிஸ் உயர் அதிகாரியின் கவனத்திற்கு சென்றதையடுத்து, உடனடியாக விசாரணை மேற்கொண்டு 3 பொலிஸாரை இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


இதில், கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.