தோட்டாக்களுடன் கடுவலை நீதிமன்றத்துக்குச் செல்ல முயற்சித்தவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தோட்டாக்களுடன் கடுவலை நீதிமன்றத்துக்குச் செல்ல முயற்சித்தவர் கைது!


துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்களை கடுவலை நீதிவான் நீதிமன்றத்துக்குள் கொண்டுச் செல்ல முயற்சித்த நபர் ஒருவர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக கடுவலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வருபவர்கள் பிரதான வாயிலின் பாதுகாப்புச் சாவடிக்கு அருகில் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில், அங்கு சந்தேக நபரின் சூட்கேஸில் இந்த தோட்டாக்கள்  கண்டுபிடிக்கப்பட்டன. 


சந்தேக நபர் வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றத்துக்கு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதி விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.