மோட்டார் சைக்கில் விபத்தில் இறந்தவரின் இறுதி ஊர்வலத்தின் சாகசம் புரிந்தவர்களை எச்சரித்த நபரை தாக்கிய சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மோட்டார் சைக்கில் விபத்தில் இறந்தவரின் இறுதி ஊர்வலத்தின் சாகசம் புரிந்தவர்களை எச்சரித்த நபரை தாக்கிய சம்பவம்!


மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியும் சாகசம் புரிந்தும் சென்ற இளைஞர்களை எச்சரித்த மூன்று பிள்ளைகளின் தந்தை தாக்கப்பட்ட சம்பவம் வாத்துவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 


கடந்த 07ஆம் திகதி மாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனின் இறுதிக் கிரியைகள் நேற்று (09) வாதுவ வெரகம பொது மயானத்தில் இடம்பெற்றது.


இதற்காக சுமார் 30 மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் குழு ஒன்று ஊர்வலமாக வந்து, இறந்த உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதாகக் கூறி, ஆபத்தான ஒற்றைச் சக்கரத்தில் சாகசம் புரிந்தும் உள்ளனர். 


பலர் அதை வெறுப்புடன் பார்த்தார்கள். ஆனால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்போது அங்கிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து எச்சரித்தார்.


இதனால் கோபமடைந்த சுமார் 30 இளைஞர்கள் அந்த நபரை கை, கால் மற்றும் தலைக்கவசங்களால் தாக்கியதாகவும், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பெரும் முயற்சி எடுத்து அவரை காப்பாற்றியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.