விளையாட்டுக்கள் தொடர்பான குற்றங்களை தடுக்க அதிவிசேட வர்த்தமானி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விளையாட்டுக்கள் தொடர்பான குற்றங்களை தடுக்க அதிவிசேட வர்த்தமானி!


விளையாட்டுகள் தொடர்பில் ஏற்படுகின்ற குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட விசாரணை பிரிவொன்றை நியமித்து, அதிவிசேட வர்த்தமானியொன்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.


இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள விசேட விசாரணை பிரிவு கடந்த  2023 பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் கையொப்பத்துடன் வௌியான அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


விசேட விசாரணை பிரிவின் பணிப்பாளர் மற்றும் தலைவராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயனாத் வணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.


விளையாட்டுகள் தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் 21 ஆவது பிரிவுக்கு அமைவாக, அந்த சட்டத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 3 ஆண்டு காலப்பகுதிக்காக இந்த விசேட விசாரணை  பிரிவு நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, தற்போதைய காலக்கட்டத்தில், ‍குறிப்பிடத்தக்க விளையாட்டுகளில், ஊழல் மோசடி, போட்டி நிர்ணயம், மோதல்கள், வீர/வீரராங்கனைகள் தெரிவில் பாரபட்சம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அண்மைக் காலங்களில் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுப்பதற்கு விசேட விசாரணை பிரிவு நியமிக்கப்பட்டள்ளமை ஊடாக முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.