வெகுவாக குறைந்துள்ள நீர்த்தேக்கங்களின் வினைத்திறன் நீர் கொள்ளளவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெகுவாக குறைந்துள்ள நீர்த்தேக்கங்களின் வினைத்திறன் நீர் கொள்ளளவு!


நிலவும் வரட்சியான காலநிலையுடன் நீர்த்தேக்கங்களின் வினைத்திறன் நீர் கொள்ளளவு வெகுவாக குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மகாவலி நீர்த்தேக்கங்களின் வினைத்திறன் நீர் மட்டம் 32% ஆகவும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் வினைத்திறன் நீர் கொள்ளளவு 32.6% ஆகவும் குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், ரந்தனிஅ 10.6%, சமனலவெவ 14%, காசல்ரீ 42.6%, மவுஸ்ஸகலே 44%, கொத்மலை 65.8 மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் வினைத்திறன் நீர் கொள்ளளவு 31.6% ஆக குறைந்துள்ளது.

இதேவேளை, மின் உற்பத்தி நீர்த்தேக்கங்களின் செயற்பாட்டு நீர் மட்டமும் 35.7 வீதமாக குறைந்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.