சொகுசு வாகனங்கள் பதிவு செய்வதில் 400 கோடி மோசடி அம்பலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சொகுசு வாகனங்கள் பதிவு செய்வதில் 400 கோடி மோசடி அம்பலம்!


400 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதி கொண்ட பல சொகுசு வாகனங்களை பதிவு செய்த பாரிய மோசடி ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


நேற்று (10) மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தின் ஆவணக் காப்பக அதிகாரி ஒருவரும் இந்த மோசடிக்கு தலைமை தாங்கிய மற்றுமொருவரும் பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 423 சொகுசு வாகனங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக வலான ஊழல் தடுப்பு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.


சொகுசு வாகன பதிவு தொடர்பான விசாரணையில், இந்த பாரிய மோசடி தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையக அதிகாரியிடமிருந்தும் போலியாக பதிவு செய்யப்பட்ட சொகுசு வாகனம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த மோசடிக்கு ஆதரவாக செயற்பட்ட மற்றுமொரு குழுவினர் தொடர்பிலான தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஊழல் தடுப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.