29 கோடி பெறுமதியான கற்களுடன் சிக்கிய பெண்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

29 கோடி பெறுமதியான கற்களுடன் சிக்கிய பெண்!


29 கோடியே 10 இலட்சம் ‌ ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கற்ககளை சுங்க அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பெண்ணொருவர் ​இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.


கொழும்பு, ஒருகொடவத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 30 வயதான வர்த்தகரான பெண்​ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 


இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான ஏ.ஐ-274 என்ற இலக்கத்தை கொண்ட விமானத்தின் ஊடாக இன்று அதிகாலை 3.15 மணியளவில் இந்தியா-சென்னைக்கு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் பயணிப்பதற்காவே அப்பெண் விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளார்.


அப்பெண் உடுத்தியிருந்த ஆடைக்குள் 2 கிலோ 311 கிராம் 75 மில்லிகாரம் நிறையுடைய மாணிக்கக்கற்கள் தொகையை மறைத்துவைத்து எடுத்துச் செல்ல முயன்றபோதே கைது செய்யப்பட்டார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.