QR முறைமையில் எரிபொருள் ஒதுக்கீட்டில் அடுத்த மாதம் ஏற்படவுள்ள மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

QR முறைமையில் எரிபொருள் ஒதுக்கீட்டில் அடுத்த மாதம் ஏற்படவுள்ள மாற்றம்!


QR முறைமையிலான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


இன்று (20) நடைபெற்ற கூட்டத்தில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அடுத்த ஆறு மாதங்களுக்கான எரிபொருள் திட்டங்கள் மற்றும் விநியோகம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டரில் தெரிவித்தார்.


இதன்படி, எரிபொருள் இறக்குமதித் திட்டங்கள், சுத்திகரிப்புச் செயற்பாடுகள், சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள், QR ஒதுக்கீடு உட்பட பல விடங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.


இதனையடுத்தே, உரிய மதிப்பீடுகளின் முடிவில், தற்போதுள்ள எரிபொருள் QR ஒதுக்கீடு முறைமையின்  கீழ்  ஆகஸ்ட் மாதத்தில் அதிகரிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.