advertise here on top
Join YazhNews WhatsApp Community

23 வயது இளைஞனுடன் தகாத உறவால் வந்த விபரீதம்!


பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த 23 வயது இளைஞன், குறித்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை அவரின் கணவனுக்கு அனுப்புவதாக மிரட்டி, பெண்ணிடம் இருந்த தங்க நகைகளை வலுக்கட்டாயமாக பறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.


நேற்றைய தினம் (19) நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்று தாம் இருவரும் ஒன்றாக இருக்கும் பொழுது அந்தப் பெண்ணுடன் குறித்த இளைஞர் நிர்வாணமாகப் படம் பிடித்துள்ளார். அதனையடுத்து அந்த நிர்வாணப் புகைப்படங்களை பெண்ணின் கணவரிடம் காட்டுவதாகக் கூறி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 1,785,000 பெறுமதியான தங்க நகைகளை வலுக்கட்டாயமாகப் பெற்றுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.


நீர்கொழும்பைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.