திருமணத்திற்கு மறுத்த காதலனை கடத்திய காதலி கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருமணத்திற்கு மறுத்த காதலனை கடத்திய காதலி கைது!


யுவதி ஒருவருடன் காதல் தொடர்பிலிருந்த இளைஞர் ஒருவர், அந்தத் தொடர்பிலிருந்து பின்வாங்கியதன் பொருட்டு அவரைக் காதலித்த பெண் குறித்த இளைஞனை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 


இதனையடுத்து இன்று (05) காலை வாத்துவ பிரதேசத்தை சேர்ந்த யுவதி உட்பட நால்வர் இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று அலோபோமுல்ல பின்வத்தை வீதியில் சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டியில் வந்தே குறித்த இளைஞனைக் கடத்திச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்தச் சம்பவம் தொடர்பில் இளைஞனும் அவரது தாயும் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.


கடத்தப்பட்ட இளைஞன், யுவதி ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், இருப்பினும் அந்த யுவதியை திருமணம் செய்து கொள்ள இளைஞன் விரும்பாத காரணத்தினால் இந்தக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


குறித்த இளைஞன் கடத்திச் செல்லப்பட்டு வெறிச்சோடிய வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.