பெம்முல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுத்கம - போகமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத்தொகுதியின் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அந்த பகுதியில் வசித்து வந்த நிலையில் நேற்று (16) இரவு 11 மணியளவில் வீட்டின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய சத்துரிக்கா மதுஷானி அபேரத்ன என பொலிஸார் தெரிவித்தனர்.
நான்காவது மாடியில் இருந்து விழுந்த மனைவியை கம்பஹா வைத்திசாலையில் கணவன் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.