யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை!


வனப் பகுதியை அண்டிய வீதி ஓரங்களில் காணப்படும் காட்டு யானைகளுக்கு உணவு வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.


வனப் பகுதிகளை அண்மித்துள்ள நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள், சாலை ஓரங்களில் காணப்படும் காட்டு யானைகளுக்கு உணவு அளிப்பதாலேயே விலங்குகள் தொடர்ச்சியாக வீதிக்கு வருகின்றன.


இதனால் அந்த வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடையூறுகள் ஏற்படும் சம்பவங்கள் கடந்த காலங்களில் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.


எனவே, காடுகளை அண்டிய பகுதிகளில் செல்லும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது வன விலங்குகளுக்கு உணவளிப்பதை தவிர்க்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


இதனிடையே, அனுமதியற்ற மின்கம்பிகளில் சிக்கி கடந்த 7 மாதங்களில் 36 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.


வன விலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக சிலர் பாதுகாப்பற்ற மின் கம்பிகளை அமைத்துள்ளதாகவும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.