மாணவர்களால் தாக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாணவர்களால் தாக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!


அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் மீது அதே பாடசாலை மாணவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இந்த தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நேற்று (26) பாடசாலை நிறைவடைந்து ஆசிரியர் வீடு சென்ற சந்தர்ப்பத்தில் அந்த பாடசாலையில் உயர் தரத்தில் கற்கும் இரண்டு மாணவர்களும், அவர்களது உறவினர்களும் இணைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


இதன்போது, ஆசிரியரின் உந்துருளி மற்றும் அவரது உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.


பாடசாலையின் ஒழுக்க கோவையை செயல்படுத்துவதில் எற்பட்ட முரண்பாட்டில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


இதேவேளை, ஆசிரியர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாடசாலை ஆசிரியர்களால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.


இந்நிலையில், சந்தேகநபர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.


எனினும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.