உயர்த்தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயர்த்தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு!


க.பொ.த உயர்த்தர மாணவர்களின் பாடசாலைக்கான வருகை வீதத்தினை 40 சதவீதமாக கருத்தில்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.


கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றில் இன்றைய தினம் (20) விசேட உரையொன்றை ஆற்றிய போதே இதனை தெரிவித்தார்.


கல்விப் பொதுத்தராதர உயர்த்தர மாணவர்களின் பாடசாலை வருகை வீதம் 80 சதவீதமாக காணப்படுவது அவசியமாகும்.


எனினும் இந்த வருடத்திற்கு மாத்திரம் பாடசாலைக்கான வருகையை 40 சதவீதமாக கருதுமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.