திருடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்ட பொலிஸ் பரிசோதகரின் மோட்டார் சைக்கிள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்ட பொலிஸ் பரிசோதகரின் மோட்டார் சைக்கிள்!


தியத்தலாவ பொலிஸ் நிலையத்தின் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் புதன்கிழமை (19) அதிகாலை திருடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தியத்தலாவை நகரில் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கைது செய்த உப பொலிஸ் பரிசோதகர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கைது செய்யப்பட்ட நபரின் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றுள்ளார்.


பின்னர் மோட்டார் சைக்கிளை எடுக்க சென்ற போது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்ட இடத்தில் காணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் ​​தியத்தலாவ கல்கந்த பிரதேசத்தில் உள்ள பைனஸ் காட்டு பகுதியில் எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்துள்ளனர்.


மேலும் சம்பவம் தொடர்பில் தியத்தலாவ பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.