பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்போ ஊழியர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்போ ஊழியர்கள்!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பல டிப்போக்களைச் சேர்ந்த பேருந்துகளின் ஊழியர்கள் தாக்குதல் சம்பவமொன்றுக்கு எதிராக இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவ்பத்தானை, பொலன்னறுவை, கெபித்திகொல்லேவ மற்றும் கந்தளாய் ஆகிய பஸ் டிப்போக்களுக்கு உட்பட்ட ஊழியர்களினால் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லங்காதீப தெரிவித்துள்ளது.

ஹொரவ்பத்தனை இலங்கை போக்குவரத்து சபை டிப்போ பரிசோதகரை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டிப்போ இன்ஸ்பெக்டர் தனியார் பஸ்சில் அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த திடீர் வேலை நிறுத்தம் காரணமாக வேலைக்குச் செல்லவும், அன்றாடப் பணிகளை மேற்கொள்ளவும் முயலும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.