தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பில் வர்த்தமானி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பில் வர்த்தமானி!


தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


ஒரு தேர்தல் மனுவை முன்வைப்பதற்கான காலப்பகுதியை நீடிப்பதற்காகவும், குற்றத்திற்கான அபராத தொகையை அதிகரிப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும் இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுளளது.


இது, உள்ளுர் அதிகாரசபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தையும், நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தையும், ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தையும், மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தையும் திருத்துவதற்கும், அவற்றோடு தொடர்புடைய அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலமாகும்.


நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவால் இந்த சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.