திருமணம் செய்ய மறுத்த காதலனை கடத்திய காதலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருமணம் செய்ய மறுத்த காதலனை கடத்திய காதலி!

காதலியை திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் பின்வத்த பொலிஸாரால் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள் பாணந்துறை பின்வத்தை அலுபோமுல்ல வீதியில் வைத்து குறித்த இளைஞனை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படை உறுப்பினர் எனக் கூறப்படும் காதலி, காதலில் ஈடுபட்ட போதிலும், அந்த இளைஞன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், இந்த கடத்தல் சம்பவத்தை திட்டமிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்ட இளைஞனின் தாயாரும், தனியார் நிறுவனமொன்றின் ஊழியரும் செய்த முறைப்பாட்டிற்கு அமைய வாத்துவ பிரதேசத்தில் வசிக்கும் காதலி உட்பட நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் இளைஞனை அருகில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டிற்கு அழைத்துச் சென்ற பின்னர் விடுவித்துள்ளனர்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.