![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPAY3EZVTX3qlE9cvc7PLgo3cC5bpL4lZhGJieLZpcRdou85azAAiq2TWQ_tN9ferL1rqqT4m3vOsMvuaZnOjhfLjCu_AvX1roDqwEUSTf7N4UxZyJNKQA_0yLs1_U1YIiNHw0vZ8WjTZDl8l-Yo-houSBDe8Y1s8sZD5DL6xQZiuCOS7GBkEuFSri28ix/s16000/IMG_5561.jpeg)
முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள் பாணந்துறை பின்வத்தை அலுபோமுல்ல வீதியில் வைத்து குறித்த இளைஞனை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படை உறுப்பினர் எனக் கூறப்படும் காதலி, காதலில் ஈடுபட்ட போதிலும், அந்த இளைஞன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், இந்த கடத்தல் சம்பவத்தை திட்டமிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்ட இளைஞனின் தாயாரும், தனியார் நிறுவனமொன்றின் ஊழியரும் செய்த முறைப்பாட்டிற்கு அமைய வாத்துவ பிரதேசத்தில் வசிக்கும் காதலி உட்பட நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் இளைஞனை அருகில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டிற்கு அழைத்துச் சென்ற பின்னர் விடுவித்துள்ளனர்.