எரிபொருள் கோட்டா தொடர்பில் புதிய தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் கோட்டா தொடர்பில் புதிய தீர்மானம்!

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை நீக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி ஜனாதிபதி, நிதியமைச்சு மற்றும் அமைச்சரவை இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் என அமைச்சர் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றைய நிலவரப்படி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 101 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் 61 நிரப்பு நிலையங்களில் ஆட்டோ டீசல் குறைந்த பட்ச இருப்பான 50% இனை பராமரிக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் மக்களுக்கு தேவையான போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதால், குறைந்தபட்ச எரிபொருள் இருப்புகளை முறையாக பராமரிக்க தேவையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.