இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம்!

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது.


உலகக் கிண்ண ஒரு நாள் போட்டிக்கான சுப்பர் 06 தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது அவர் நடத்தை தொடர்பில் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


குறித்த போட்டியில் ஆட்டமிழந்து மைதானத்தை விட்டு திரும்பும் போது வனிந்து ஹசரங்க தனது மட்டையால் எல்லைக்கு அடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இதன்படி, இது நடத்தை விதிகளின் முதல் தர மீறல் என உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு, தகுதிக்குறைவு மதிப்பெண் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இவ் வருடத்தில் வனிந்து ஹசரங்க செய்த இரண்டாவது குற்றச்செயல் இது என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.