காதலனுடன் விடுதியில் தங்கியிருந்த 22 வயது யுவதி தூக்கிலிட்டு தற்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காதலனுடன் விடுதியில் தங்கியிருந்த 22 வயது யுவதி தூக்கிலிட்டு தற்கொலை!


இளைஞர் ஒருவர் தனது காதலி எனக் கூறப்படும் 22 வயதான யுவதியுடன் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது  அவரது காதலி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து காணப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.   


இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இறக்குவானை பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞன், தனது காதலி என்று கூறப்படும் 22 வயதுடைய  யுவதியுடன் முச்சக்கரவண்டியில் இறக்குவானை பனாவல பகுதிக்குச் சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் அறை ஒன்றைப் பதிவு செய்து அங்கு தங்கியதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.


பின்னர் குறித்த இளைஞன் தனது காதலியை அந்த அறையில் விட்டுவிட்டு மதிய உணவு கொண்டு வருவதற்காக வெளியே சென்றதாகவும் திரும்பி வந்து பார்த்தபோது தனது காதலி குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டதாகவும் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.   


குறித்த யுவதி குளியலறையில் தனது ஆடையின் ஒரு பகுதியைப் பயன்படுத்தியே தூக்கில் தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பில் குறித்த இளைஞர் விடுதி  ஊழியர்களுக்கு அறிவித்ததையடுத்து, ஊழியர்களின் உதவியுடன் யுவதி  காவத்தை வைத்தியசாலைக்குக் கொண்டு  செல்லப்பட்டுள்ளார்.


அங்கு  யுவதியைப் பரிசோதித்த  வைத்தியர்கள் அவர்  இறந்துவிட்டதாக தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.


இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.