ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக 14 மாணவர்களின் கல்வி நடவடிக்கை இடைநிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக 14 மாணவர்களின் கல்வி நடவடிக்கை இடைநிறுத்தம்!


ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி கற்கும் 14 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். 


அந்த பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆதாரங்களுடன் அடையாளம் காணப்பட்ட 14 மாணவர்களின் கல்வி நடவடிக்கையே இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.


விசாரணைகள் முடியும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்ய  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.