14 வயது சிறுமி துன்புறுத்தி துஷ்பிரயோகம்; சந்தேகநபருக்கு 12 வருட கடூழிய சிறை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

14 வயது சிறுமி துன்புறுத்தி துஷ்பிரயோகம்; சந்தேகநபருக்கு 12 வருட கடூழிய சிறை!


சிறுமியை அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2009 ஆம் ஆண்டு செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் வைத்தும் அதன் பின்னரும் பதினான்கு வயதுடைய சிறுமி ஒருவரை துன்பறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட குற்றவாளிக்கு நேற்று (12) கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


குறித்த வழக்கானது நேற்றைய தினம் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்புகாக எடுத்துக் கொள்ளப்பட்டது.


கடந்த 2009ம் ஆம் ஆண்டு 14 வயதுச் சிறுமி ஒருவரை அடித்து துன்புறுத்தியும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் என்றும், சிறுமியின் வாக்கு மூலம் மற்றும் சாட்சியங்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை என்பவற்றின் மூலம் நீதிமன்றம் குறித்த நபரை குற்றவாளியாக இனம்கண்டு மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.


இவ்வாறு, குறித்த சிறுமியை அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுதுடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும், தவறும் பட்சத்தில் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் விதித்துள்ளதுடன், உடல், உள ரீதியாகவும் சமூகத்திலும் பாதிப்புக்களை சிறுமி எதிர்கொண்டுள்ளதனால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபா இழப்பீட்டினை வழங்குமாறும் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.