முச்சக்கர வண்டியில் சென்ற சுற்றுலா பயணிகளை தாக்கிய காட்டு யானை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முச்சக்கர வண்டியில் சென்ற சுற்றுலா பயணிகளை தாக்கிய காட்டு யானை!


முச்சக்கர வண்டிகளில் சுற்றுலா சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று ஒற்றை காட்டு யானையின் தாக்குதலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.  


சுற்றுலாப் பயணிகள் பொலன்னறுவையில் உள்ள தேசிய பூங்காவிற்கு முச்சக்கர வண்டிகளில் சென்று கொண்டிருந்த போது வீதியின் ஓரத்தில் யானையை எதிர்கொண்டுள்ளனர்.


வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் பகிரப்பட்ட வீடியோ காட்சி சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை குறித்த யானைக்கு அருகாமையில் நிறுத்தியதைக் காட்டுகிறது.


அப்போது, ​​யானை அவர்களை நோக்கிச் சென்று, அவர்களின் இரு முச்சக்கர வண்டிகளையும் கவிழ்த்துவிட்டு, மேலுமொரு நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை மிதித்துள்ளது. 


சம்பவத்தின் போது முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.