யானை தாக்கி உயிரிழந்த யுடியூப் பிரபல யுவதியின் கணவருக்கு விளக்கமறியல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யானை தாக்கி உயிரிழந்த யுடியூப் பிரபல யுவதியின் கணவருக்கு விளக்கமறியல்!


கொஸ்லாந்தை - உடதியலும பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


சந்தேகநபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பின்னர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


கடந்த மே 11 ஆம் திகதி பிற்பகல், கொஸ்லந்த தியலும நீர்வீழ்ச்சியின் மேல் பகுதிக்கு இந்த இளம் தம்பதியினர் சென்று இரவு முகாமிட்டுள்ளனர்.


அதன்போது, இரவு வேளையில் குறித்த இருவர் மீது காட்டு யானை தாக்கியதில், யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


காயமடைந்த இளைஞர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் யுவதியின் காதலர் வழங்கிய முரண்பாடான வாக்குமூலங்கள் காரணமாக கொஸ்லந்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.