மிகவும் மோசமான கொலைகாரி என பெயரெடுத்த பெண் 20 ஆண்டுகளுக்கு பின் நிரபராதி என விடுதலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மிகவும் மோசமான கொலைகாரி என பெயரெடுத்த பெண் 20 ஆண்டுகளுக்கு பின் நிரபராதி என விடுதலை!

 


அவுஸ்திரேலியாவின் மிகவும் மோசமான பெண் சீரியல் கொலைகாரி என்று பெயரெடுத்த கேத்லீன் ஃபோல்பிக் 20 ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கேத்லீன் ஃபோல்பிக் (Kathleen Folbigg) என்ற தாய் தன்னுடைய நான்கு குழந்தைகளை கொலை செய்த வழக்கில் கடந்த 2003ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து கேத்லீன் ஃபோல்பிக் அவுஸ்திரேலியாவின் மிகவும் மோசமான பெண் சீரியல் கொலைகாரி என்ற பெயர் பெற்றார்.

கேத்லீன் ஃபோல்பிக், ஒன்பது மாதம் முதல் 03 வயது வரையிலான அவருடைய குழந்தைகளை மூச்சிறைக்க செய்து கொன்றதாக வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் வாதிட்டார்.

ஆனால் கேத்லீன் ஃபோல்பிக் குழந்தைகள் இயற்கையான வழியிலேயே இறந்ததாக உறுதியாக நின்றார். இருப்பினும் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் விளக்கப்படாத உயிரிழப்புகள் அரிதான மரபணு மாற்றங்கள் மற்றும் பிறவி அசாதாரணங்களுடன் தொடர்புடையவை என வெளியான புதிய தடயவியல் சான்றிதழ்களை மேற்கோள்காட்டி 2021ம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அறிவியலாளர்கள் கேத்லீன் ஃபோல்பிக் விடுதலைக்காக கோரிக்கையை முன் வைத்தனர்.

இதனடிப்படையில் நியூ சவுத் வேல்ஸ் அட்டர்னி ஜெனரல் மைக்கேல் டேலி, கேத்லீன் ஃபோல்பிக் மன்னிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் இதன்மூலம் கேத்லீன் ஃபோல்பிக் விரைவாக சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

2003 ல் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட கேத்லீன் ஃபோல்பிக் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சிறைவாசத்தில் கழித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.