![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMTtl1sDm8LBX4ZWTLlKZve6zOmQcM08fWCG40yqaawjly2izwVqLvvZBLcIFOcmub2-rMRDsmsAj3jViqNmsIR2RKg6cH3x1V2kwCdsu7lTIwJwXxuw0M-gowJdMTGhUvtGOPHRiEhFKmoKUXjhjCYrUDZJMOMlqtxtQoRiQ3jHGY8OchCRSWA8W70A/s16000/IMG_4492.jpeg)
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-45 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.