பொலிஸார் மீது கைக்குண்டு வீச முட்பட்டவர் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸார் மீது கைக்குண்டு வீச முட்பட்டவர் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் ஒருவர் கைது!


காலி, கராப்பிட்டிய பகுதியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.


நேற்றிரவு (10) 11.30 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அக்மீமன - வஞ்சாவல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார்.


அக்மீமன காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவர் நேற்றிரவு குறித்த பகுதிக்கு சோதனைக்காக சென்றுள்ளனர்.


அதன்போது சந்தேகத்துக்கிடமான வகையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டு, குறித்த காவல்துறை உத்தியோகத்தர்கள் அதன் அருகில் சென்றபோது, அங்கிருந்த சந்தேகநபர்கள் இருவர் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.


அவர்களை தப்பிச் செல்லவிடாமல் காவல்துறை உத்தியோகத்தர்கள் தடுக்க முற்பட்டபோது, ​​அவர்களில் ஒருவர் காவல்துறையினர் மீது கைக்குண்டை வீச முயன்றுள்ளார்.


அந்த சந்தர்ப்பத்தில் காவல்துறை உத்தியோகத்தர்களில் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேக நபரொருவர் காயமடைந்து, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பின்னர், மற்றைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து T-56 ரகத்தைச் சேர்ந்த 105 தோட்டாக்கள் அடங்கிய பொதியொன்றும் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.