தனது குட்டியை கொன்ற நபரை ஆத்திரத்தில் கடித்துக் கொன்ற ஒட்டகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது குட்டியை கொன்ற நபரை ஆத்திரத்தில் கடித்துக் கொன்ற ஒட்டகம்!


தான் ஈன்றெடுத்த குட்டியைக் கொன்ற ஆடவரைத் தாய் ஒட்டகமே கடித்துக் கொன்ற சம்பவம் ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் நிகழ்ந்துள்ளது.


அந்த ஆடவர், ஒட்டகக் குட்டியைக் கொன்று, அதன் தலையைப் பிடித்திருந்தார். அதனைக் கண்டதும் தாய் ஒட்டகம் வெறியடைந்ததாகக் கூறப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, அந்த ஆடவரை அந்த ஒட்டகம் கடுமையாகத் தாக்கியது. ஒட்டகம்  கடித்ததால் ஆழமான காயம் ஏற்பட்டு, அவரது உடலிலிருந்து நிற்காமல் இரத்தம் கொட்டியது. இறுதியில், 70களில் இருந்த அந்த முதியவர் இறந்துபோனார்.


இந்தப் புவியில், வஞ்சம் தீர்க்காது விடாத விலங்குகளில் ஒட்டகமும் ஒன்று என்பது அரபு இனத்தவர் உள்ளிட்ட பல இனத்தவரின் நம்பிக்கை.


எத்தனை ஆண்டுகளானாலும் ஒட்டகம் தன் ஆத்திரத்தை மனத்திற்குள்ளேயே புதைத்து வைத்திருக்கும் என்றும் பழிதீர்க்க சரியான நேரத்திற்காக அது காத்திருக்கும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.