தற்கொலைக்கு தடை விதித்த நாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்கொலைக்கு தடை விதித்த நாடு!


வட கொரியாவில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு தற்கொலை செய்வோர் எண்ணிக்கை 40 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதை அடுத்து, அங்கு தற்கொலைக்கு தடை விதித்து அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

தற்கொலை என்பது ஒருவர் தனக்கு தானே சுய விருப்பத்தின்படி செய்யும் கொலையாகும். வெறுப்பு, கோபம், மன அழுத்தம், பயம், வறுமை போன்ற பல காரணங்களால் தற்கொலை நடக்கிறது.

இது குற்றமாக கருதப்பட்டாலும், அந்த எண்ணத்தில் இருந்து மீண்டு வர பல வழிகளும் இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில் வடகொரியாவில் கடந்தாண்டை விட இந்தாண்டு தற்கொலை செய்வோர் எண்ணிக்கை 40 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தற்கொலையை தடுக்க அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் வினோதமான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதாவது, நாட்டில் இனி தற்கொலைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். தற்கொலை சோசியலிசத்துக்கு எதிரானது எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.