13 கோடி பெறுமதியான வாகன கொள்ளை; மாகாண சபை முன்னாள் உறுப்பினரின் மகன் உட்பட மூவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

13 கோடி பெறுமதியான வாகன கொள்ளை; மாகாண சபை முன்னாள் உறுப்பினரின் மகன் உட்பட மூவர் கைது!


தெல்தெனிய, கெங்கல்ல பகுதியில் அதிசொகுசு வாகன விற்பனை நிறுவனத்தில் அதிசொகுசு ஜீப் வண்டிகள் மூன்று மற்றும் வானொன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரின் மகன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினருக்கு உரி பல்லேகம தெரகமுவே வீட்டுக்கு பின்புறமாக அமைந்துள்ள வாகனம் திருத்தும் நிலையத்தில் வைத்தே ஜீப் வண்டிகள் இரண்டு கைப்பற்றப்பட்டன.


வத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வாகன விற்பனை நிலையத்துக்கு நேற்று வியாழக்கிழமை (29) அதிகாலை வேளையில் உள்நுழைய ஐவர் அடங்கிய கொள்ளைக் கோஷ்டியினர். அங்கிருந்த காவலாளியை கட்டி வைத்துவிட்டு, சுமார் 12 கோடி பெறுமதியான வாகனங்கள் மூன்றை கடத்திச் சென்றிருந்தனர்.


அந்த டிப்பெண்டர்கள் இரண்டையும் துண்டுத்துண்டுகளாக கழற்றுவதற்கு தயாராகிக் ​கொண்டிருந்த போதே மீட்கப்பட்டன. அங்கிருந்த இருவர் மற்றும் வாகன திருத்தும் நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மற்றுமொரு வாகனத்தை தேடி, கெங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.